Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மக்கள் வங்கி 2020 ஆண்டறிக்கை பிரதமரிடம் கையளிப்பு

 


மக்கள் வங்கியின் 2020 ஆம் ஆண்டிற்கான வருடாந்த அறிக்கை மக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கெயளிக்கப்பட்டது.


இந்த நிகழ்வு இன்று (22)முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. 


ஆண்டறிக்கையின்படிமக்கள் வங்கியின் வரிக்கு முந்தைய இலாபம் ரூபாய் 21 பில்லியனும்வரிக்குப் பிந்தைய இலாபம் ரூபாய் 14 பில்லியனும் ஆகும்.

2020 ஆம் ஆண்டிற்கான மக்கள் வங்கியின் பங்கு இலாபம் ரூபாய் 3.5 பில்லியன் எனவும்அரச வரி ரூபாய் 14 பில்லியன் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


அரச நிதிக் கொள்கையைப் பின்பற்றி மக்கள் வங்கி இந்த ஆண்டில் 25 பில்லியன் ரூபாய் இலாபம் மற்றும் ரூபாய் 15பில்லியனுக்கும் அதிகமான வரி வருவாயை எதிர்பார்ப்பதுடன்எதிர்பார்க்கும் பங்கு இலாபம் 3 பில்லியனாகும்.


இந்த நிகழ்வில் மக்கள் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஞ்சித் கொடிதுவக்குநிதி அதிகாரி அசாம் அஹமட் மற்றும் விநியோக நிறைவேற்று அதிகாரி நாலக விஜேவர்தன ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments