Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

2022 உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களினால் பாடசாலை சீருடை விநியோகம்


 உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் 2022ம் ஆண்டுக்கான பாடசாலைச் சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பபினை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


உள்நாட்டு உற்பத்தியாளர்களை ஊக்குவித்து பாடசாலை சீருடைகளை அவர்களிடமிருந்து கொள்வனவு செய்ய அமைச்சரவை ஏற்கெனவே அனுமதி வழங்கியுள்ளது.

எனவே, கைத்தொழில் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களிடம் அதற்கான விலை மட்டங்களைக் கோரி விநியோகஸ்தர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 

அடுத்த வருடத்திற்கான பாடசாலைச் சீருடைகளை இந்த வருட இறுதி பாடசாலைத் தவணைக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் முன்வைத்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments