Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலே காரணம் - பந்துல


இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயுடன் ஏனைய எண்ணெய் வகைகள் கலக்கப்படுவதை தடை செய்யும் புதிய வர்த்தமானி வெளியிடப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். 

இதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் அதிகார சபையை வலியுறுத்தியுள்ளதாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் குறிப்பிட்டார். 

அமைச்சர்  இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில், 

இறக்குதி செய்யப்படும் எண்ணெய் வகைகளுடன் ஏனைய எண்ணெய் வகைகளை கலப்பதற்கு அனுமதி அளித்து 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  வர்த்தமானி அறிவித்தலை ரத்துச் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் எண்ணெய் பிரச்சனைக்கு கடந்த அரசாங்க காலத்தில் வெளியிடப்பட்ட அந்த வர்த்தமானி அறிவித்தலே காரணம் எனறும் தெரிவித்தார்.

No comments