வார இறுதிநாட்களில் நாட்டினை முடக்கும் தீர்மானம் எட்டப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பாடசாலைகளை மூடுமாறு அதிபர் சங்கமும் , நாட்டினை குறைந்தது எதிர்வரும் 4 நாட்களுக்கு (விடுமுறை தினங்கள்) முடக்குமாறு சுகாதார பரிசோதர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். www.tamilnews1.com
இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தில் விசேட ஊடக சந்திப்பு நடைபெற்றது. அதன் போதே இராணுவ தளபதி அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் குருநாகல் மாவட்டத்தில் சில பகுதிகளும் , இரண்டு பொலிஸ் நிலையங்கள் உள்ளடங்கலாக சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் நாட்டினை முழுமையாக முடக்குவது தொடர்பில் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை. www.tamilnews1.com
பொதுமக்கள் பொறுப்புணர்ந்து செயற்படவேண்டும். நாட்டினை முழுமையாக முடக்குவதோ , போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பில் தீர்மானிக்கவில்லை. தேவை ஏற்படின், கொரோனா பரவல் தீவிரமடையும் இடங்களை முடக்குவதற்கான நடவடிக்கைகள் எடுப்படும் என தெரிவித்தார். www.tamilnews1.com
No comments