Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஒருவர் கைது!


வவுனியாவில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் நபரொருவர் கைதுசெய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

42 வயதுடைய ஒருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதானவர், விடுதலை புலிகள் அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களின் பெயரில் அடையாள அட்டை மற்றும் போலியான கடவுச் சீட்டுக்களைத் தயாரித்து, ஆட்களை வௌிநாடுகளுக்கு அனுப்பிவைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் குறித்த நபரிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்

No comments