முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதிகளில் எந்தவொரு நிகழ்வினை நடாத்தவும் , மக்கள் ஒன்று கூடவும் தடை விதிக்குமாறு முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் மனு தாக்கல் செய்து தடை உத்தரவை பெற்றுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று காரணமாக எதிர்வரும் 16ஆம் திகதி தொடக்கம் 22ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் பகுதிகளில் நிகழ்வுகளை நடாத்த , மக்களை ஒன்று கூட்டுவதற்கு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து. ரவிகரன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு தடையுத்தரவு கோரி முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முல்லைத்தீவு பொலிஸார் மனு தாக்கல் செய்தனர். குறித்த மனு மீதான விசாரணைகளை அடுத்து , நீதிமன்றம் தடை யுத்தரவு வழங்கியுள்ளது.
No comments