Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

எதிர்வரும் மூன்று நாட்களும் ஊரடங்கு நடைமுறைகளே அமுலில் இருக்கும்!


இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணி வரையில் பயண தடை அமுலில் இருக்கும். 

குறித்த பயண தடையின் போது , ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது இருக்கும் நடைமுறைகள் காணப்படும்.  www.tamilnews1.com 

பயண தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்வரும் 3 நாட்களும் , அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் அடையாள அட்டை இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளியில் செல்லும் நடைமுறை 3 நாட்களும் இருக்காது. திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு பிறகே அடையாள அட்டை நடைமுறையில் வெளியில் செல்ல முடியும்.   www.tamilnews1.com 

இதேவேளை போக்குவரத்து சேவைகளும் மூன்று நாட்களும் இடைநிறுத்தப்படுகின்றன.   www.tamilnews1.com 

அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவர். ஏனைய எந்த தேவைகளுக்கும் எதிர்வரும் மூன்று நாட்கள் எவரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 

No comments