கொரோனா தொற்றாளரிடமிருந்து சிகரெட் வாங்கி பற்ற வைத்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதுடன் , அவருடன் பணியாற்றும் 17 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. www.tamilnews1.com
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , www.tamilnews1.com
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஸ்ரீநகர் கொலனி பகுதியில் வசிக்கும் தனியார் நிறுவன முகாமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஊழியர்கள் 17 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. www.tamilnews1.com
குறித்த முகாமையாளருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என விசாரிக்கப்பட்ட போது , நிறுவனத்தின் முன்பாக உள்ள தேநீர் கடையில் சிகரெட் புகைக்க சென்றதாகவும் , அதன் போது அங்கு ஒருவர் இருமிக்கொண்டு இருந்ததாகவும் , அவரிடம் சிகரெட் வாங்கி தன்னுடைய சிகரெட்டை பற்ற வைத்ததாகவும் , அதனூடாகவே தனக்கு தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். www.tamilnews1.com
கொரோனா தொற்றாளரிடம் சிகரெட் வாங்கி பற்ற வைத்தமையால் 18 பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். பொறுப்பற்ற விதத்தில் ஒருவர் செயற்பட்டால் கூட , அவர் சார்ந்திருக்கும் நபர்களுக்கும் ஆபத்து உண்டு என்பதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் நடைபெற்ற இச் சம்பவம் அனைவருக்கும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
No comments