Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

7ஆம் திகதிக்கு பிறகும் பயணத்தடை நீடிக்குமா?


வரும் ஜூன் 7ஆம் திகதிக்குப் பின்னரும் தற்போதைய பயணக் கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இராணுவத் தளபதி, ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

மருத்துவர்கள் உள்ளிட்ட பொறுப்பான தரப்பினருடன் தினசரி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னர், ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடிய பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, அடுத்த மாதம் 7ஆம் திகதி வரை நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான முடிவு எடுக்கப்படும் என்று ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கடந்த ஒரு வாரத்தில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்ததன் வெற்றி அல்லது தோல்வியை நாளை ஜூன் 1 ஆம் திகதிக்குப் பின்னர்தான் அறிய முடியும் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையில், சீன தயாரிக்கப்பட்ட சைனோபார்ம் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் ஜூன் 8ஆம் திகதி முதல் வழங்கப்படும். என்று கோவிட் -19 பரவுவதைத் தடுக்கும் தேசிய செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, முதல் டோஸ் எடுத்தவர்கள் இரண்டாவது டோஸை ஜூன் மாதத்தில் அதே திகதியிலும், முதல் டோஸ் எடுக்கப்பட்ட இடத்திலும் பெற முடியும் என்று ராணுவ தளபதி தெரிவித்தார்.

No comments