யானைகள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை எனவும் , அதனால் யானைகள் - மனிதர்களுக்கு இடையிலான மோதல்கள் அதிகரித்து வருவதாகவும் குரல் கொடுத்து வருவதுடன் , ஊடகங்களில் செய்தி அறிக்கையிடல்களையும் செய்து வந்த ஊடகவியலாளரின் வீட்டினை யானை ஒன்று துவம்சம் செய்துள்ளது. www.tamilnews1.com
வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது , www.tamilnews1.com
குறித்த பணிகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்து காணப்பட்டுள்ளது. மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வரும் யானைகளால் பெரும் சிரமங்கள் , உயிர் அச்சுறுத்தல்களுடன் அப்பகுதி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பில் அதிகாரிகள் பாராமுகமாக செயற்பட்டு வந்துள்ளனர். யானைகள் - மனிதர்களுக்கு இடையிலான மோதல்கள் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் குரல் கொடுத்து வந்ததுடன் , அது தொடர்பிலான செய்தி அறிக்கையிடல் களையும் செய்து வந்தார். www.tamilnews1.com
இந்நிலையிலையே ஊடகவியலாளரின் வீட்டினை யானை ஒன்று துவம்சம் செய்துள்ளது. அதனால் வீடு பகுதிகளவில் முற்றாக சேதமடைந்துள்ளது.
அதேவேளை வீட்டில் இருந்தவர்கள் பாதுகாப்பு தேடி வீட்டினை விட்டு வெளியேறியமையால் காயங்கள் இன்றி தப்பித்துள்ளனர். www.tamilnews1.com
No comments