வட்டுக்கோட்டையில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பயணத்தடை நடைமுறையில் உள்ள நிலையில் வட்டுக்கோட்டை சங்கரத்தை வீதியில் நேற்றிரவு 3 கடைகளில் கூரை பிரித்து இறங்கி திருட்டு இடம்பெற்றிருந்தது. www.tamilnews1.com
இந்த திருட்டுச் சம்பவங்க்களுடன் தொடர்புடைய சுழிபுரத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞனே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 45 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பால்மா வகைகள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் கூறினர். www.tamilnews1.com
திருட்டுச் சம்பவங்களை ஏற்றுக்கொண்டு வாக்குமூலம் வழங்கியுள்ள சந்தேக நபர், தான் தனியவே திருட்டில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். www.tamilnews1.com
இதேவேளை, பயணத்தடை நடைமுறையில் இருந்த நிலையில் ஒரு வாரத்துக்கு முன்னர் மாவடி மூளாய் வீதியிலும் கடை ஒன்று கூரை பிரித்து இறங்கி பணம் திருடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. www.tamilnews1.com









No comments