பயணக்கட்டுப்பாடுகள் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் , மதுபான விற்பனை நிலையங்களும் 7ஆம் திகதி வரையில் மூடப்பட்டு இருக்கும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னோண்டோ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , www.tamilnews1.com
தற்போது நடைமுறையில் உள்ள பயண தடையானது , எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. அதேவேளை நாளை மற்றும் 31ஆம் , 4ஆம் திகதிகளில் பயண கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்படும்
அன்றைய தினம் அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவுக்கு மாத்திரமே கடைகள் திறக்கப்படும். அதற்காக மாத்திரமே பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும். www.tamilnews1.com
நாட்டில் உள்ள அனைத்து மது விற்பனை நிலையங்களும் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் மூடப்பட்டு இருக்கும் என தெரிவித்தார். www.tamilnews1.com









No comments