Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொடிகாம சந்தையுடன் தொடர்புடைய நான்கு பேர் உள்ளிட்ட 09 பேருக்கு யாழில் கொரோனா!


வடக்கு மாகாணத்தில் மேலும் 14 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன அதில் 14 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கொடிகாமம் வர்த்தகத் தொகுதியில் வர்த்தகர்கள், பணியாளர்களிடம் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நால்வருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதேவேளை சாவகச்சேரி உள்ளூராட்சி சபை உறுப்பினர் ஒருவருக்கும் , நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் , (அவர்களில் இருவர் சுயதனிமைப்படுத்தலில் கண்காணிப்பட்டவர்கள். மற்றவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன்) சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மானிப்பாயில் நிதி நிறுவன ஊழியர்களிடம் எழுமாறாக முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் நிதி நிறுவன ஊழியர் ஒருவருக்கும் யாழில் 09 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன்,  மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் உத்தியோகத்தர் ஒருவருக்கும் ,புதுக்குடியிருப்பு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கண்டி சென்று திரும்பிய ஆசிரியர் ஒருவருக்கும் ,வவுனியா பூவரசங்குளம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் ,மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் கண்காணிக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் , கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும்  தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.” என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

No comments