சீன அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட
5 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் சீன தூதுவரால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு கையளிக்கப்படது.
சீனா அரசாங்கத்தின் நன்கொடையாக இதற்கு முன்னர் 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டதுடன் தற்போது 5 இலட்சம் தடுப்பூசிகள் மேலதிகமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் சீனாவில் உற்பத்தி செய்யப்படும் சினோபார்ம் தடுப்பூசியை இலங்கையில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதன்போது தெரிவித்துள்ளார்.









No comments