யாழ்ப்பாணம் மாதகல் கடல் கரை பகுதியில் 110 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். www.tamilnews1.com
மாதகல் கடல் வழியூடாக படகில் ஒருவர் கஞ்சா போதை பொருளை கடத்தி வருவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கடற்படையினர் கரையில் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் படகில் கஞ்சாவை கடத்தி வந்து கரையில் இறக்க முற்பட்ட வேளை கடற்படையினர் அவரை முற்றுகையிட்டு கைது செய்தனர்.
அதன் போது அவர் படகில் கடத்தி வந்திருந்த 110 கிலோ கஞ்சாவையும் கடற்படையினர் மீட்டனர். www.tamilnews1.com
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் அளிக்கபப்ட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் , கடற்படையினரால் கைது நபரையும் , மீட்கப்பட்ட கஞ்சாவையும் பொறுப்பெடுத்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்,. www.tamilnews1.com
www.tamilnews1.com www.tamilnews1.com









No comments