Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹெரோயின் போதை பொருளுடன் 2 பெண்கள் உட்பட 6பேர் கைது


நாவலப்பிட்டி பகுதியில் ஹெரோயின் போதை பொருள் விற்பனை செய்யும் சந்தேக நபர்கள் 06 பேரை இன்று (21) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 24, 26 வயதுடைய பெண்கள் இருவர் உட்படுவதாக நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதர்கள் தெரிவித்தார்.

நாவலப்பிட்டிய செலான் பிரிட்ஜ் பகுதி வீடொன்றில் ஹெரோயின் போதை பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்ததாக சந்தேக நபர்களை கைது செய்யும் சந்தர்ப்பத்தில் அவர்களிடமிருந்து ஹெரோயின் 112 மில்லி கிராம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி, நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் பல்வேறு சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டவர் எனவும் தெரிய வருகின்றது.

சந்தேக நபர் நாவலப்பிட்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நாவலப்பிட்டி பிரதான பொலிஸ் பரிசோதகர் தெரிவித்தார்

No comments