Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுகின்றது!


வேலைவாய்ப்பு சந்தை மீண்டெழுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது என்று உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, வேலையின்மை வீதம் வீழ்ச்சியடைந்து, வேலை காலியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஏப்ரல் வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.7 சதவீதமாக இருந்தது. இது முன்னர் 4.8 சதவீதமாக இருந்தது என்று தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

மார்ச் முதல் மே வரையிலான காலியிடங்களின் எண்ணிக்கை 758,000ஆக இருந்தது. இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் 27,000ஆக இருந்தது.

இருப்பினும், இளைஞர்கள் மற்றும் விருந்தோம்பலில் உள்ளவர்களிடையே வேலையின்மை அதிகமாக உள்ளது.

பொருளாதார புள்ளிவிபரங்களின் ஓஎன்எஸ் தலைவரான சாம் பெக்கெட் இதுகுறித்து கூறுகையில், ‘மே மாதத்தில் ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 200,000ஆக உயர்ந்துள்ளது.

வசந்த காலத்தில் வேலை காலியிடங்கள் தொடர்ந்து மீண்டு வந்தன. மே மாதத்திற்குள் மொத்தம் அதன் தொற்றுநோய்க்கு முந்தைய அளவைத் தாண்டிவிட்டது. விருந்தோம்பல் போன்ற துறைகளில் வலுவான வளர்ச்சியைக் கொண்டிருந்தது என்று எங்கள் ஆரம்ப மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன’ என கூறினார்.

No comments