Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹபராதுவையில் கொரோனா தடுப்பூசி திருட்டு


ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயம் குறித்து பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருடப்பட்ட 30 சினோபார்ம் தடுப்பூசிகளின் மொத்த பெறுமதி 90 ஆயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளது.

குறித்த சுகாதார பணிமனையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பாக சுகாதார வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்தே இவர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments