Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

புத்தூர் வீதியில் சென்றவர் மயங்கி விழுந்து மரணம்!


யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்தவர் திடீரென மயக்கமுற்று விழுந்து உயிரிழந்துள்ளார். 

புத்தூர் - நிலாவரை வீதி வழியாக இன்றைய தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை , திடீரென மயக்கமுற்று வீதியில் விழுந்துள்ளார். 

அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு அச்சுவேலி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றனர்.அவர் உயிரிழந்து விட்டார்  என வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். www.tamilnews1.com 

பிரேத பரிசோதனைக்காக்க சடலம் வைத்திய சாலையில்  வைக்கப்பட்டுள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர். 
 www.tamilnews1.com 

No comments