கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வீட்டில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அரசமருத்தவ சங்கத்தின் செயலாளர் செனால் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உருவான 1ம், 2ம் கொரோனா அலைகளை விட 3ம் அலையில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக 3வது அலையில் முதியவர்களின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. 60 வீதமான மரணங்கள் கடந்த ஒன்றரை மாதங்களில் நிகழ்ந்துள்ளன.
இதுவரை கொரோனாவினால் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 58 வீதமானவை மூன்றாம் அலையிலேயே ஏற்பட்டுள்ளன இது மிகவும் ஆபத்தான நிலைமை.
அதேவேளை உயிரிழந்தவர்களில் 73 முதல் 75வீதமானவர்கள் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், முதலாவது, இரண்டாவது அலைகளில் வீடுகளில் உயிரிழப்புகள் இவ்வளவு தூரம் இடம்பெறவில்லை.
இதேவேளை 90வீதமான போக்குவரத்தை கட்டுப்படுத்துவதற்காகவே போக்குவரத்து தடைகள் நடைமுறைக்கு வந்தன. ஆனால் அவற்றால் 60 வீதம் மாத்திரம் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிந்தது என தெரிவித்துள்ளார்.







No comments