யாழ்ப்பாணத்தில் மேலும் இருவர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 91ஆக உயர்வடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நயினாதீவைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வெள்ளாந்தெருவைச் சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 ஆயிரத்து 291ஆக உயர்வடைந்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை 101 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்
No comments