குழந்தை ஒன்றுக்கு மதுபானத்தை வழங்கி ,அதனை குடிக்க வைத்து , காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த 25 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியகோட பகுதியை சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த பகுதியில் வசிக்கும் இளைஞன் 4 வயது குழந்தை ஒன்றுக்கு பியர் ரின் ஒன்றினை வழங்கி , அதனை குழந்தை குடிக்கும் காட்சியை காணொளியாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த இளைஞனை கைது செய்துள்ளனர்.







No comments