Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சிறையில் உள்ள 17 முன்னாள் போராளிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க ஜனாதிபதி முடிவாம்!


பொசனை முன்னிட்டு விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 17 பேருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையை மேற்கோள் காட்டி சிலோன் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

நாளைய தினம் பொசனை  முன்னிட்டு பல வருடங்களாக சிறையிலிருக்கும் 17 முன்னாள் விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பை வழங்கவுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை செய்யப்படவுள்ளவர்கள் விடுதலைப்புலிகளிற்காக செயற்பட்டவர்கள் எனும் குற்றச்சாட்டில் பல் ஆண்டுகளாக சிறையில் இருந்துள்ளனர். அவர்கள் அனுபவிக்கவேண்டிய தண்டணை காலத்தை விட அவர்கள் நீண்ட காலம் சிறையிலிருந்துள்ளனர். அந்நிலையிலையே அவர்களுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். 

No comments