யாழ்.மாவட்டத்தில் 152 பேர் உட்பட வடக்கில் 213 பேருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேசிய கொவிட் தடுப்புக்கான செயற்பாட்டு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள நிலவர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அதன் பிரகாரம் , யாழ்ப்பாணம் -152, முல்லைத்தீவு -23, வவுனியா – 22, கிளிநொச்சி -13 மற்றும் மன்னாரில் 03 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை நாட்டில் மொத்தம் 3,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவற்றுடன் , நோயாளர் தொகை 192,546 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று 39 கொரோனா மரணங்கள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றுடன் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,566 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









No comments