நாளை பயணத்தடை நீக்கப்பட்டதும் புதிய வழிகாட்டுதலின் படி ஜூலை 5ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன அறிவித்துள்ளார்.
புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன,
புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி, ஒரு டக்ஸி உள்பட வாகனத்தில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும்.
அத்துடன், வீட்டிலிருந்து இருவர் மட்டுமே அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியேற முடியும்.
திருமண வைபவங்கள், விழாக்கள், விருந்துகள் நடத்துவதற்கான தடை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும்.
மேல் மாகாணத்தில் பொதுப் போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுவோருக்கு மாத்திரமே சேவையில் ஈடுபட முடியும்.
களியாட்ட விடுதிகள், மதுபான சாலைகள் மூடப்பட்டிருக்கவேண்டும்.
பல்பொருள் அங்காடிகளில் இட அளவில் 25 சதவீதமான வாடிக்கையாளர்களையே அனுமதிக்க முடியும்.
வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்க நடை அடகுச் சேவைகளுக்கு அனுமதி.
மேல் மாகாணத்தில் கூட்டங்கள் நடத்தத் தடை.
ஆலயங்களில் பக்தர்கள் திரண்டு வழிபாடுகளில் ஈடுபடத் தடை.







No comments