தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 26ஆயிரம் பேருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
உரிய முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்களில் , கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் 1,034 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கமைய, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 26,920 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 26 ஆயரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்தார்







No comments