Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கர்ப்பிணி மனைவியை கொன்ற இலங்கையருக்கு தமிழக பொலிஸார் வலை வீச்சு!


இந்தியாவில் கர்ப்பிணியான தனது இரண்டாவது மனைவியை அடித்து கொலை செய்ததாகக் கூறப்படும் இலங்கை அகதியை தமிழக பொலிஸார் தேடி வருகின்றனர். 

காந்திமா நகரில் கடந்த திங்கட்கிழமை இரவு இலங்கை தமிழ் அகதி ஒருவர் தனது இரண்டாவது மனைவியை கொலை செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில்,

குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபரை கைது செய்ய பொலிசார் நான்கு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளனர். அத்தோடு, ராமேஸ்வரம் ஊடாக அவர் இலங்கைக்கு தப்பிச் செல்வதைத் தடுக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பழைய கட்டடங்களை இடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த 49 வயதான லாவேந்திரன் என்ற குமார், அவரது இரண்டாவது மனைவியான எல்.கவிதாவை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக சரவணம்பட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments