Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமியை துஸ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகஸ்தர்




காதலனால் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்த பட்டமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற சிறுமிக்கு பொலிஸ் கான்ஸ்டபிள் முத்தமிட்டுள்ளார். 

முத்தமிட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது செய்யப்பட்டு மேலதிக  விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , 

நெலுவ மேல் கிக்குமடுவா பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி இளைஞன் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். குறித்த இளைஞன் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி காணொளி மற்றும் ஒளிப்படங்களை எடுத்துள்ளார். 

அவற்றை வைத்து சிறுமியை மிரட்டி பல தடவைகள் துஸ்பிரயோகத்திற்கு  உள்ளாக்கி வந்துள்ளார். 

இது குறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர்கள் இளைஞனை பிடித்து பொலிஸ்  நிலையத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்துள்ளனர். 

அதன் போது , சிறுமியிடம் வாக்கு மூலம் பெற வேண்டும் என சிறுமியையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துள்ளனர். அதனால் , சிறுமியும் , தாயாரும் பொலிஸ் நிலையம் சென்ற போது அவர்களிடம் வாக்கு மூலம் பெறாமல் இரவு முழுவதும்  அவர்களை பொலிஸ் நிலையத்தில் தங்க வைத்துள்ளனர். 

இந்நிலையில் இன்றைய தினம் காலை அவர்கள் தாயும் , பாதிக்கப்பட்ட சிறுமியும் தங்கியிருந்த இடத்திற்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் சிறுமிக்கு முத்தம் கொடுத்ததாக தாயார் தெரிவித்துள்ளார். 


No comments