Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கை மீனவர்களிடம் போதைப்பொருள் கேட்டு இந்திய கடற்படையினர் தாக்குதல்!


இலங்கை மீனவர்களிடம் இந்திய கடற்படையினர் போதை பொருள் கேட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். www.tamilnews1.com 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , www.tamilnews1.com 

கடந்த மே மாதம் 07ஆம் திகதி நீர்கொழும்பு பகுதியில் இருந்து ஆழ் கடல் மீன்பிடிக்க இரண்டு படகுகளில் 13 மீனவர்கள் பயணித்துள்ளனர். 

கடந்த 4ஆம் திகதி (ஜூன்) மீனவர்கள் சர்வதேச கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவர்களது படகிற்கு அருகில் சென்ற இந்திய கடற்படையினர் , மீனவர்களின் படகினுள் ஏறி , மீனவர்களிடம் போதைப்பொருள் கேட்டு மிரட்டியள்ளனர். www.tamilnews1.com 

மீனவர்கள் தம்மிடம் போதை பொருள் இல்லை என கூறிய போது மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , அவர்களின் படகில் இருந்த உபகரணங்களையும் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். 

இந்திய கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த மீனவர்களுக்கு சக மீனவர்கள் முதலுதவிகளை செய்திருந்தனர். 

இந்நிலையில் இன்றைய தினம் கரை திரும்பிய மீனவர்களில் மூவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி இருந்தமையால் , அவர்கள் நீர்கொழும்பு தள வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 
www.tamilnews1.com 

No comments