Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

70 ஆயிரத்து 200 பைஸர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன!


பைஸர் தடுப்பூசியின் 70 ஆயிரத்து 200 டோஸ்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

இந்தத் தடுப்பூசிகளுடன் இலங்கைக்கு மொத்தம் ஒரு இலட்சத்து 28 ஆயிரத்து 700 டோஸ் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

பைசர் தடுப்பூசிகள் ஆரம்பத்தில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை முதல் டோஸாகப் பெற்றவர்களுக்கு 2 ஆவது டோஸாக வழங்கப்பட்டது.

இருப்பினும், மேலும் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விரைவில் பெறப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தத் திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments