Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

இரண்டு டோஸ்களையும் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது அவசியம்


கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பொதுமக்கள் பெற்றிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்றவேண்டியது அவசியம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நோயாளர்கள் குறைவாக பதிவாகுவதால், ஆபத்து இல்லை என்ற அடிப்படையில் செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் ஆயிரத்து 500 முதல் 2 ஆயிரம் வரையில் நோயாளர்கள் பதிவாகின்ற நிலையில், டெல்டா திரிபுடனும் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறாயன நிலையில், எதிர்காலத்தில் வேறு திரிபுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, சுகாதார வழிகாட்டல்களை உரியவாறு பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments