Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

யானையை வசியம் செய்ய முற்பட்டவர் யானை தாக்கியதில் உயிரிழப்பு!


யானையை கண்டதும் கூட சென்றவர்கள் ஓடிய நிலையில் , யானைக்கு எதிரே நின்று யானைக்கு மந்திரம் செய்ய முற்பட்டவரை யானை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.   www.tamilnews1.com 

திருகோணமலை கிண்ணியா ஆலங்கேணி பகுதியை சேர்ந்த கந்தசாமி விஸ்வகேது (வயது 72) என்பவரே உயிரிழந்துள்ளார்.. 

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,  www.tamilnews1.com 

அப்பகுதியை சேர்ந்த நான்கு பேர் மீன் பிடிப்பதற்காக குளப்பகுதிக்கு சென்றுள்ளனர். அதன் போது யானை ஒன்று அவர்களை நோக்கி ஓடி வந்த போது , அவர்கள் அவ்விடத்தில் இருந்து சிதறி ஓடியிருக்கின்றனர்.   www.tamilnews1.com 

உயிரிழந்த நபர் மாத்திரம் யானைக்கு மந்திரம் ஓதி வசியப்படுத்துவதாக கூறி ஓடாது யானையை எதிர்கொண்டு நின்றுள்ளார்.   www.tamilnews1.com 

அவரை யானை தாக்கி தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளது. அதில் படுகாயமடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிண்ணியா வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.   www.tamilnews1.com 


No comments