பசில் ராஜபக்ஷ அமைச்சரானமைக்கு வாழ்த்து தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்களினால் வெடி கொளுத்தி இனிப்பு பண்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுன கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னால் பொதுமக்களுக்கு இனிப்பு பண்டங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறினார்கள் என நேற்றைய தினம் 32 பிக்குகள் பெண்கள் உள்ளிட்ட 32 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இன்றைய தினம் பொதுஜன பெரமுனாவின் கொண்டாட்டத்தில் பல ஆதரவாளர்கள் கலந்து கொண்டு இனிப்பு பண்டங்களை வழங்கி இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments