Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பாலைப்பழம் பறித்தவர்களை விரட்டிய அதிகாரிகள் - கத்திகளும் பறிமுதல்




 கிளிநொச்சி - பூநகரி பகுதியில் பாலைப்பழம் பறித்தவர்களை வனவள திணைக்கள அதிகாரிகள் எச்சரித்து,  அவர்களின் கத்திகளை பறித்துச் சென்றுள்ளனர்.

பூநகரி வீதியில் ஜெயபுர பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் அப்பகுதிகளை சேர்ந்தோர்  பாலைப் பழம் பிடுங்கிக் கொண்டிருந்த போது அவ்விடத்திற்கு வருகை தந்த வனவளத் திணைக்களத்தினர் பாலைப் பழம் பிடுங்க வேண்டாம் என எச்சரித்து , அவர்களிடமிருந்த நான்கு கத்திகளையும் பறித்துச் சென்றுள்ளனர். 

பாலைப் பழ சீசன் காலமான சித்திரை, வைகாசி, ஆனி மாதங்களில் பல குடும்பங்கள் பொருளாதார நிலைமை காரணமாக பாலை மரங்களின் கிளைகளை வெட்டி பழம் பிடுங்குவார்கள்.

அவற்றை வீதியில் செல்வோருக்கு விற்பனை செய்வார்கள். அதேவேளை அவற்றை  வற்றலாக்குதல் , பாணி காய்ச்சுதல், போன்றவற்றையும்  செய்வார்கள். 

பொருளாதார நெருக்கடியில் வாழும் மக்கள் பாலைப்பழ  சீசன்  காலத்தில் அவற்றின் மூலம் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையிலையே பாலைப்பழங்களை பறித்தவர்களை வனவள திணைக்கள அதிகாரிகள் எச்சரித்து,  அவர்களின் கத்திகளை பறித்துச் சென்றுள்ளனர்.

No comments