Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

முல்லைத்தீவில் வெடிப்பு சம்பவம் - குடும்பஸ்தர் படுகாயம்!

 


முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாலை பகுதியில் விறகு வெட்டிய போது வெடிபொருள் வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அம்பலவன்பொக்கணை கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்ற 35 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரும் அவருடைய மனைவியும் மகனும் சாலை பகுதியில் அமைந்திருக்கும் நீரேரியின் அருகிலே சென்று மனைவியும் மகனும் உப்பு அள்ளிக் கொண்டிருந்த போது கணவன் அருகில் உள்ள பற்றைக்காடுகளில் விறகு வெட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில்  மரத்தடியில் இருந்த வெடிபொருள் மீது கோடாரி மோதி குண்டு வெடித்துள்ளது.

இதன்போது காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் அறிந்த முல்லைத்தீவு பொலிஸார் குறித்த இடத்திற்கு சென்று குறித்த பகுதியை பாதுகாப்பற்ற பகுதியாக அடையாளப்படுத்தி மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments