Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நீச்சல் பழகிய 6வயது சிறுவர்களும் , பழக்கிய தாத்தாவும் நீரில் மூழ்கி உயிரிழப்பு!




ஆற்றில் நீச்சல் பழகிய 6 வயதுடைய இரட்டை சிறுவர்களும் , நீச்சல் பழக்கிய சிறுவர்களின் தாத்தாவும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

கொஸ்கொட பிரதேசத்தை சேர்ந்த தாத்தா , தனது இரண்டு பேரன்களுடனும் துவே மோதர கங்கையில் இன்றைய தினம் நீராடினர். அதன் போது தாத்தா தனது இரண்டு பேரன்களுக்கும் நீந்த பழக்கிக்கொண்டு இருந்துள்ளார். 
 
அவ்வேளை திடீரென கங்கையின் நீர் மட்டம் உயர்ந்தமையால் எதிர்பாராத விதமாக மூவரும் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் துரித கெதியில் நடைபெற்ற போதிலும் அது பயனற்ற நிலையில் ,  கடற்படையினரின் சுழியோடிகள் மூவரின் சடலங்களையும் மீட்டு வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர். 

No comments