சகோதரிகளான சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த சிறிய தந்தைக்கு 90 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுர மேல் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைகள் நடைபெற்று முடிந்த நிலையில் , எதிரிக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் சந்தேகத்திற்க்கு இன்றி நிரூபணமானது என குறிப்பிட்ட நீதிபதி எதிரியை குற்றவாளியாக கண்டு 90 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
சகோதரிகளான 12 மற்றும் 15 வயது சிறுமிகளை அவர்களது சிறிய தந்தை பல சந்தர்ப்பங்களில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி இருந்தார்.
அது தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில் சிறிய தந்தையை குற்றவாளியாக கண்ட நீதிபதி கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
No comments