Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுப்பு!


 நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, மலையகச் சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக, கொழும்பு தெற்கு பிரிவு சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினரும் கொழும்பு தெற்கு பிரிவு குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் இந்த விசாரணைகளை மேற்கொள்கின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம், குறித்த குழுக்கள் சிறுமி முன்னதாக தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்ற அவிசாவளை, புவக்பிட்டி – கிரிவந்தல பிரதேசத்தில் நான்கு பேரிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சிறுமி கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் மற்றும் உப அதிபரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் டயகம பகுதிக்கு சென்று, சிறுமியின் தாயாரிடம் மீளவும் வாக்குமூலம் பெறவுள்ளதுடன், ஏனைய சிலரிடமும் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன எனவம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணியாற்றிய ஆண் பணியாளரின் கைபேசியை பொலிஸார் சில தினங்களுக்கு முன்னர் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பின்னணி

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

கடந்த 03ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறித்து தெரியவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments