கொரோனா வைரஸ் பரம்பல் காரணமாக கடந்த ஒன்பது மாதங்களாக மூடப்பட்டிருந்த பாரிஸ் ஈபிள் கோபுரம் மீண்டும் இன்று (16) மக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 13,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் , முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பார்வையாளர்களுக்கு மேலும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 50 சதவீதம் குறைவான எண்ணிக்கையிலான பார்வையாளர்களே கோபுரத்தின் மீது செல்லும் ‘லிப்ட்’-ல் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments