Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கல்லுண்டாய் வெளியில் பேருந்து விபத்து - பலர் படுகாயம்!


காரைநகரில் இருந்து யாழ்.நகர் பகுதிக்கு பயணிகளை ஏற்றி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்தவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கல்லுண்டாய் பகுதியில் இன்று காலை 7.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் , இன்றைய தினம் காலை மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கும் தண்மையுடன் காணப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வேகமாக வந்த பேருந்து அப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்ப தகவல்கள் மூலம் அறிய முடிகிறது. 

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 







No comments