Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில்.இன்றும் கொரோனோவால் மூவர் உயிரிழப்பு!


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 3 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த 68 வயதுடைய ஆண் ஒருவரும் சுன்னாகம் ஊரெழுவைச் சேர்ந்த 56 வயதுடைய யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் ஒருவரும் , கொடிகாமத்தைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்தனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் அனுமதி பகுதியில் பணியாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 156ஆக உயர்வடைந்துள்ளது

No comments