பாராளுமன்றம் அருகே நேற்று (03) நடைபெற்ற போராட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த மஹரகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பலத்த காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டக்காரர்கள் பொலிஸாரின் கட்டைளையை மீறி வீதித்தடைகளை தகர்த்து முன்னோக்கி செல்ல முற்பட்ட சந்தர்ப்பத்தில் அவர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments