Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

பெண்கள் மீது தாக்குதல் - ஒருவர் உயிரிழப்பு - தாக்குதலாளியும் உயிர் மாய்ப்பு!




வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த இரு பெண்கள் மீது கூரிய ஆயுதத்தால் நபரொருவர் தாக்குதல் மேற்கொண்டதில் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.  www.tamilnews1.com 

இதேவேளை தாக்குதலை மேற்கொண்ட நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்.  www.tamilnews1.com 
 
கஹடகஸ்திகிலிய குகுலவே பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 46 வயதுடைய ஆணும் , 44 வயதுடைய பெண்ணுமே உயிரிழந்துள்ளனர்  உயிரிழந்த இருவரும் தம்பதியினராவர்கள்.  www.tamilnews1.com 
 
தம்பதியினர் இருவரும் பிரிந்து வாழும் நிலையில் , மனைவி வீதியில் மற்றுமொரு பெண்ணுடன் சென்று கொண்டிருந்த வேளை  வழிமறித்த கணவன் , இரு பெண்கள் மீதும் சரமாரியாக கூரிய ஆயுதத்தால் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளார். 
 
வீதியில் சென்றவர்கள் இரு பெண்களையும் வைத்திய சாலையில் அனுமதித்த போது , அங்கு சிகிச்சை பயனின்றி ஒருவர் உயிரிழந்தார். மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.  www.tamilnews1.com 
 
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கஹடகஸ்திகிலிய பொலிஸார் தாக்குதலாளியை கைது செய்ய சென்ற போது , அவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்த நிலையில் , சடலமாக காணப்பட்டுள்ளார்.  www.tamilnews1.com 
 
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

No comments