Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் 24 மணி நேரத்தில் மேலும் இருவர் கொரோனோவால் மரணம்!


யாழ்ப்பாணத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 2 பேர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுப்பிட்டியைச் சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

நேற்றைய தினம் வல்வெட்டித்துறை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். சுகாதார பரிசோதகரின் ஆலோசனைக்கு அமைய அவரது சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160ஆக உயர்வடைந்துள்ளது.

No comments