Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மங்களவின் மரணத்திற்கு காரணம் மாரடைப்பு!


பைசர் தடுப்பூசிகளை முழுமையாக செலுத்தியிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, கொரோனா தொற்று உறுதியாகிய நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உயிரிழந்தார்.

இருவருக்கு கொரோனா தொற்றுடன் நிமோனியா தொற்றுக்குள்ளான நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அவர் மிகவும் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் பின்னர் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

இதனை அடுத்து கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வந்த மங்கள சமரவீர, நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மங்கள சமரவீர நீண்ட காலமாக நீரிழிவு மற்றும் சிறுநீரக செயலிழப்பால் அவதிப்பட்டிருந்த நிலையில், அதற்காக அவர் சிகிச்சைகள் மேற்கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments