Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வாளினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 13 பேர் மறியலில்!




யாழிலிருந்து கிளிநொச்சி பகுதிக்கு சென்று வாளினால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 13 இளைஞர்களை கிளிநொச்சி நீதிமன்று  விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. www.tamilnews1.com 

 
தென்மராட்சி கொடிகாமம் பகுதியை சேர்ந்த இளைஞர்களே  அவ்வாறு  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். www.tamilnews1.com 
 
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 
 
கொடிகாமத்தில் இருந்து குறித்த இளைஞர் குழு 06க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி முழங்காவில் பகுதிக்கு சென்று அங்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். www.tamilnews1.com 
 
இது தொடர்பில் தகவல் அறிந்த முழங்காவில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்ற போது , சுமார் ஐந்தடி நீளமான கேக் ஒன்று , அதனை வெட்ட பயன்படுத்தப்பட்ட வாள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டன. அத்துடன்  பின்புறத்தில் கறுப்பு துணியில் 001 எனவும் கெமி எனவும் எழுதப்பட்டு கட்டப்பட்டு இருந்தன. www.tamilnews1.com 
 
யாழில் இயங்கும் ஆவா குழு , 001 எனும் குறியீட்டு இலக்கத்தை  பயன்படுத்துவது வழமை என்பதனால் , சந்தேகம் கொண்ட பொலிஸார் அங்கிருந்த 13 இளைஞர்களையும் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். www.tamilnews1.com 
 
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , கிளிநொச்சி நீதிமன்றில் அவர்களை முற்படுத்தினர். அதனை அடுத்து மன்று அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.  www.tamilnews1.com 

No comments