இலங்கையில் தற்போதைய கோவிட்-19 உயிரிழப்புகள் மற்றும் நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரித்தால், அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சுமார் 18,000 பேர் உயிரிழப்பார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் இலங்கை அலுவலகம் சிறப்பு மருத்துவர்களின் பங்கேற்புடன் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை நேற்று (12 ம் தேதி) சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையிலிருந்து இலங்கையர்களைப் பாதுகாக்க பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்குதல், மாகாணப் பயணக் கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக மாவட்டப் பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், குறுகிய காலத்திற்கு ஊரடங்கு உத்தரவு விதித்தல், அனைத்து பொது நிகழ்வுகளையும் மூன்று வாரங்களுக்குத் தடை செய்தல்,
பொதுக் கூட்டங்களைத் தடுப்பது, சுகாதாரப் பணியாளர்களைப் பாதுகாத்தல், பயனுள்ள தகவல் தொடர்புத் திட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு கல்வி கற்பித்தல், சரியான இறப்பு புள்ளிவிவரங்கள் விடுவித்தல் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விரைவில் தடுப்பூசி போடுவது என பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை உலக சுகாதார நிறுவனம் மற்றும் 30 இலங்கை மருத்துவ நிபுணர்களால் தொகுக்கப்பட்டுள்ளது.
No comments