Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

சீனாவின் தடுப்பூசியை பெற்று வெளிநாடு செல்ல காத்திருப்போர் நிர்க்கதியில்!


சீனாவின் தயாரிப்பான சினோபார்ம் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டு வெளிநாடு செல்ல காத்திருப்போர், மீண்டும் வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே, இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டு, வெளிநாடு சென்று மேலும் இரண்டு தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக வெளிநாடு செல்ல காத்திருப்போர் கருதுகின்றனர்.

இதுகுறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் ரமேஸ் பத்திரன, சுமார் 25 நாடுகள் ஒரு சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே அங்கீகாரம் வழங்கியுள்ளன. எனவே, அந்தந்த நாடுகள் அங்கீகரிக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொடுப்பது குறித்து வேலைத் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளோம். ஆனால், வெளிநாடு செல்லும் எதிர்பார்ப்பில் இருந்து சினோபார்ம் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் குறித்தே சிக்கலே எழுந்துள்ளது.

ஆனால், தடுப்பூசி பெறாது வெளிநாடு செல்லும் எதிர்பார்ப்பில் உள்ளவர்கள், செல்லும் நாட்டில் எந்த தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுள்ளதோ அதே தடுப்பூசியை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரும், இணை அமைச்சரவைப் பேச்சாளருமான மருத்துவர் ரமேஸ் பத்திரனை தெரிவித்துள்ளார்.

No comments