தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படுமா இல்லையா என்பது குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வரவுள்ளது.
இந்நிலையில் அதனை தொடர்ந்தும் நீடிப்பதா? இல்லையா? என்பது குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments