மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் படுத்திருந்த சிறுவன் மீது மேசை மின் விசிறி தவறி விழுந்த நிலையில் சிறுவன் உயிரிழந்துள்ளார். ww.tamilnews1.com
காங்கேயனோடை பத்ரு பள்ளிவாசல் வீதியை சேர்ந்த முஹம்மத் ரிழ்வான் (வயது 3) எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார். ww.tamilnews1.com
சிறுவன் வீட்டில் நிலத்தில் தூங்கிக்கொண்டு இருந்த வேளை தாயார் குளிக்க சென்று இருந்தார் , தாயார் குளித்து விட்டு வந்து பார்த்த போது , மேசை மேலிருந்த மின் விசிறி சிறுவன் மீது விழுந்த நிலையில் காணப்பட்டுள்ளது.
மின் விசிறியை தூக்கி தூக்கி விட்டு சிறுவனை எழுப்பிய போது சிறுவன் உணர்வற்ற நிலையில் காணப்பட்டமையினால் , அயலவர்கள் உதவியுடன் ஆரையம்பதி வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் போது சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டான் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அதனை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ww.tamilnews1.com
அதேவேளை சம்பவம் தொடர்பில் காத்தான் குடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ww.tamilnews1.com
No comments